ARTICLE AD BOX
குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மெட்சல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இருக்கு சுகன்யா என்ற 31 வயது மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதையும் படியுங்க: ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த நபர்.. திருநங்கையாகும் ஆசையில் மரணம்.. என்ன நடந்தது?
சுகன்யா அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் மூழ்கிய அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 22 வயது இளைஞர் பழக்கமானார்.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாவில் பேச, நேரில் பார்க்கலாம் என ஒரு நாள் பார்த்துள்ளனர். ஆனால் இது கள்ளக்காதலாக மாறியது. வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி வெளியில் கோபியுடன் சுற்றிய சுகன்யா, ஒரு கட்டத்த்தில் கள்ளக்காதல் கண்ணை மறைத்தது.
இதனால் வீட்டில் இருந்து ஓடி வந்துவிடுகிறேன், இருவரும் ஒன்றாக வாழலாம் என சுகன்யா கூற, கோபியும் சம்மதித்துள்ளார். அதன்படி குழந்தைகளை கூட கவனிக்காமல், எல்லாத்தையும் விட்டு விட்டு அந்த பெண் இளைஞருடன் தலைமறைவானார்.

கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், ஒரு நாள் பணி நிமித்தமாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெயராஜ், தனது மனைவி கள்ளக்காதலனுடன் பைக்கில் செல்வதை பார்த்துள்ளார்.
உடனே அவர்களை பிடிக்க துரத்தினார். இதையறிந்த அவர்கள், பைக்கை கீழே போட்டுவிட்டு, ஓடும் பேருந்தில் ஏறி தப்பியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
