ARTICLE AD BOX
தமிழகத்தில் போதைப் பழக்கத்தால் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மூதாட்டியை கூட விட்டுவைக்காத கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதையும் படியுங்க: அடக்கடவுளே.. ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வசித்து வந்த 80 வயது மூதாட்டி சுசீலா. அவர் வீட்டின் பின்புறம் உள்ள மாந்தோப்பிற்கு கத்தியவாடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்ற 19 வயது இளைஞர் வந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர், மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அத்துமீறியுள்ளார். பயந்து போன மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் மூதாட்டியை கீழே தள்ளி தரதரவென இழுத்து சென்றுள்ளார்.
அப்போது உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நந்தகுமார் மூதாட்டியை தரதரவென இழுத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து நந்தகுமாரை கைது செய்துள்ளனர்.
