ARTICLE AD BOX
கோவப்பட்ட சந்தீப் கிஷன்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இதையும் படியுங்க: அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!
இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி மக்களுக்காக அரசியலில் இறங்கியுள்ளார்,அவர் சினிமாவை விட்டு விலகும் நேரத்தில்,அவருடைய மகனான ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகர் சந்தீப் கிஷனை வைத்து எடுக்கக்கூடிய இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது,ஆனால் சில நாட்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட போவதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன,படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் மெல்ல தொடங்கிய நிலையில்,நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவரிடம் செய்தியார்கள் பேட்டி எடுத்த போது,ஒருவர் ‘விஜயின் மகன் படம்’ என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்,அதற்கு உடனே சந்தீப்,விஜய் மகன் என்று ஏன் சொல்லுறீங்க,அவருக்கு ‘ஜேசன் சஞ்சய்’ என்று பெயர் உள்ளது என கொஞ்சோ கட்டமாக கடிந்து கொண்டார்.
அதன் பிறகு படத்தின் வேலைகள் மும்மரமாக சென்று கொண்டிருக்கிறது,அனைவரும் விரும்ப கூடிய படமாக நிச்சயம் அமையும் என பேசினார்.