ARTICLE AD BOX
சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தனர்.
இதில் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் கிரிக்கெட் வீரர் சாஹல். அவருடன் அமர்ந்து போட்டியை ரசித்து பார்ததிருந்த பெண் யாரென்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்தனர்.
அதே சமயம் தனுஸ்ரீ என்பவரை திருமணம் செய்திருந்த சாஹல் விவாகரத்து செய்திருந்தார். இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என கூறப்பட்டது.
மேலும் சாஹலிடம் இருந்து ₹60 கோடி ஜீவவானம்சம் கோரியிருந்தார் தனுஸ்ரீ. இந்த நிலையில் 2வது திருமணம் செய்யத்தான் முதல் மனைவியை சாஹல் விவாகரத்து செய்தாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சாஹலுடன் இருந்த பெண் மஹ்வாஷ். இவர் தொகுப்பாளியினியாக உள்ளார். இருவரும் ஒன்றாக இருந்ததை வைத்து டேட்டிங், திருமணம் என வதந்தியை பரப்புகின்றனர், இது போன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சாஹலின் முன்னாள் மனைவி தனுஸ்ரீ, பெண்களை குறை சொல்வது ஃபேஷனாகி உள்ளது என பதிவிட்டுள்ளார்.