ARTICLE AD BOX
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர்.
தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்ததால் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து பின்னர் பிரிந்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இருந்தாலும் இருவரும் அவரவர் கேரியரில் கவனம் செலுத்த, ஒரு பக்கம் நாகசைதன்யா சோபிதாவை காதலித்து திருமணமும் செய்தார். மறுபக்கம் சமந்தா மியோசிடைஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவுக்கு பிரேக் போட்டார்.
பின்னர் ல்ல மெல்ல மீண்டும் வந்த சமந்தா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக களமிறங்கிவிட்டார். இருந்தாலும் சமந்தா நடித்த சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரியஸ் இயக்கிய இயக்குநருடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்-
இருவரும் டேட்டிங்கில் உள்ளதாகவும், திருமணம் செய்ய போவதாக கூறப்படுகிறது. மேலும் இன்ஸ்டாவில் காதலர் தினத்தன்று சமந்தா வைத்த ஸ்டேட்ஸ் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் இயக்குருடன் ஒருவருடன் ஹைத்ராபாத்தில் தனி வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
