ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.
மது, சிகரெட், உடலுறவு என சர்ச்சையில் சிக்கி வந்த ஓவியா, வெளிப்படையான பேச்சை பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் கவர்ந்துள்ளது. ஆனால் அவரின் பேச்சுக்கு விமர்சனங்களும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
இதையும் படியுங்க: பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!!
சமீபத்திய பேட்டி ஒன்றில், யாரைப் பற்றியும் எனக்கு கவலையில்லை, எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழுகிறேன், யாருக்கும் நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.
மேலும் ஓரினச்சேர்க்கை குறித்த கேள்விக்கு, அது பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கு? அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், நல்ல வேளை நான் இயற்கைக்கு நேரான உடலுறவில் தான் இருக்கிறேன் என சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.

அவர் இப்படி ஓபனாக பேசியது பலரிடம் பாராட்டுக்களை பெற்றாலும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான பேச்சை பேசும் ஓவியாவை, மது, புகைப்பிடித்தல் போன்ற விஷய்ங்கள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையலாம் என்றும் விமர்சிக்கின்றனர்.
