உத்தரகாண்டில் மேலும் ஒரு இடத்தில் வெள்ளப்பெருக்கு? தொடர் நிகழ்வுகளால் மக்கள் அதிர்ச்சி…

2 months ago 39
ARTICLE AD BOX

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசியின் தரலி என்ற பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்த நிலையில் அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 10 முதல் 12 குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டது.. 

another cloud burst in sukhi top in uttarakhand

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில்  மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட விடுதிகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டது. 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது உத்தரகாண்டின் சுகி டாப் என்ற பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கால அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பலி எண்ணிக்கை குறித்த எந்த தகவல்களும் இல்லை. அந்த வீடியோ இதோ…

Scary visuals from Sukhi top.

It's been raining in Uttarakhand for 3 days straight now.

Cloud burst in regions of Himalayas. pic.twitter.com/fLeYf0Xt51

— Gems_of_Bharat (@Gemsof_Bharat) August 5, 2025
  • Actress sangeetha and singer krish divorce இன்ஸ்டா  பெயரில் மாற்றம்? கிரிஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற சங்கீதா? என்னப்பா சொல்றீங்க!
  • Continue Reading

    Read Entire Article