ARTICLE AD BOX
வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் பணியாற்றினார்.
விடுதியில் தங்கி பணியாற்றிய வந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து விசாரணையில், பணியாற்றிய இடத்தில் புளோரிடா என்ற பெண்ணுடன் தனக்கு நட்பு ஏற்பட்டது.
இருவரும் விடுதியில் ஒன்றாக தங்கி பணிக்கு சென்று வந்தோம். அந்த சமயம், புளோரிடா மது பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார். அதனால் நானும் அந்த பழக்கத்திற்கு உட்பட்டேன்.
இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்த நிலையில், கடந்த மே 27ஆம் தேதி மது விருந்துக்கு புளோரிடா அழைத்தார். நானும் அவருடன் சென்றேன். அப்போது நண்பர்கள் என மானசே, ஆக்னசே என இருவரை எனக்கு புளோரிடா அறிமுகம் செய்து வைத்தார்.
அனைவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினோம், மது போதை அதிகமாக நான் மயங்கிவிட்டேன், மறுநாள் எழுந்து பார்த்த போது என்னுடன் மானசே நிர்வாணமாக இருந்தார்.
நானும் நிர்வாணமாக இருந்த நிலையில், புளோரிடா பக்கத்து அறையில் ஆக்னசேவுடன் தங்கியிருந்தார். அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிவிட்டு, மானசேவிடம் சண்டை போட்டேன்.
பின்னர் மருத்துவமனைக்கு சென்ற போது தான், தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் என்னுடை தாயார் வேதனையில் உள்ளார். உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

1 year ago
144









English (US) ·