ARTICLE AD BOX
ஐபிஎல் 18வது சீசன் தொடரில் குவாலிபையர் 2வது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதையும் படியுங்க: பேருந்து பயணத்தில் ஏற்பட்ட மாரடைப்பு-அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல இயக்குனரின் மரணச் செய்தி!
17 வருடமாக கோப்பையை வெல்லாத பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் நாளை இறுதிப்போட்டி எதிர்கொள்கிறது. இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக நேற்று நடந்த குவாலிபையர் 2 போட்டியில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 207 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
— K✝️ (@KRITIKAQUEEN2) June 2, 2025இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாமல் தோல்வியை தழுவிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தரையில் உட்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதை பார்த்த பஞ்சாப் வீரர் ஸ்டோய்னிஸ் பாண்டியாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
