ARTICLE AD BOX
இந்திய சினிமாவின் அகராதி
இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே. AVID படத்தொகுப்பு, Dolby ஆடியோ என பல தொழில்நுட்பங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பங்கை அளித்தவர் கமல்ஹாசன்.

ஆனால் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட சினிமா விழா ஒன்றில் கமல்ஹாசனை அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது.
ஒன்றிய அரசின் சினிமா விழா
2025 ஆம் ஆண்டின் Waves சினிமா விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்சய் குமார், அல்லு அர்ஜூன், மோகன் லால், ஐஸ்வர்யா ராய், ராஜமௌலி, சிரஞ்சீவி, ஆலியா பட் உட்பட பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினால்தான் கமல்ஹாசன் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.
கமல்ஹாசன் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்ற காரணத்திற்காகவே அவரை அழைக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். அதே போல் நடிகர் பிரித்விராஜிற்கும் அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. பிரித்விராஜ் இயக்கிய “எம்புரான்” திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் பலமாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
