சம்பள பாக்கி வைத்த நிறுவனம்.. பெண் தூய்மைப் பணியாளர் விபரீத முடிவு!

10 months ago 101
ARTICLE AD BOX

சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சென்னையின் வியாசர்​பாடியைச் சேர்ந்​தவர் சுமதி(37). இவர் தூய்மைப் பணியாளர் ஆவார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் தி.நகர் பிர​காசம் தெரு​வில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி​யமர்த்​தப்​பட்​டார். ஆனால், பணியில் சேர்ந்த சில நாட்​களி​லேயே பெண் பணி​யாளர் வேண்​டாம், ஆண் பணி​யாளர்​தான் வேண்டும் என நிர்​வாகம் முடி​வெடுத்​துள்ளது.

எனவே​, சுமதி பணியி​லிருந்து நிறுத்​தப்​பட்​டுள்ளார். ஆனால், அவர் பணி செய்த நாட்களுக்​கான சம்​பளம் கொடுக்​கப்​ப​டா​மல் தொடர்ந்து இழுத்​தடிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பலமுறை கேட்​டும் சும​திக்​கான நிலுவைச் சம்பளம் கொடுக்​கப்​பட​வில்​லை. இதனால் விரக்தி அடைந்த அவர், கடந்த மார்ச் 4ஆம் தேதி மாலை, சம்​பந்​தப்​பட்ட அலுவலக நுழை​வாயி​லில் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டுள்ளார்.

Arrested

இதனால் உடல் முழு​வதும் பலத்த தீக் காயத்​துடன் கீழ்பாக்​கம் அரசு மருத்துவமனையில் சுமதி அனு​ம​திக்​கப்​பட்டுள்ளார். பின்னர், மார்ச் 13ஆம் தேதி உயிரிழந்​துள்ளார். இதனையடுத்து, இந்த விவ​காரம் தொடர்​பாக தேனாம்​பேட்டை போலீ​சார் விசா​ரித்து வந்​தனர்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்..!!

இந்த ​நிலை​யில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனி​யார் நிறுவன மனிதவள மேலாண்மை மேலா​ள​ரான பழைய பெருங்​களத்​தூரைச் சேர்ந்த பிரீத்தி (40) என்​பவர் கைது செய்​யப்​பட்​டுள்ளார். முன்னதாக டெல்லி சென்​றிருந்த அவரை அங்கு சென்று போலீ​சார் கைது செய்​தனர்.

  • Coolie Movie Release Date Postponed கூலி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்… படக்குழு எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்!!
  • Continue Reading

    Read Entire Article