ARTICLE AD BOX
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் தங்கி இருந்து காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்தார்.
இதையும் படியுங்க: விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 17 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழியான 14 வயது சிறுமிக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவை, காட்டூரில் உள்ள மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் பதுங்கி இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதன் இடையே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜான் ஜெபராஜ் உறவினரான கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெனட் ஹரிஸ் என்பவரை கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறும் போது சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெனட் ஹரிஸ் கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.