ARTICLE AD BOX
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சட்டம் தன் கடமையை செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!
தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சட்டம் தன் கடமையை செய்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் அடக்க முறை ஏவப்பட்டு உள்ளது. விலைவாசி ஏற்றம் மட்டுமல்ல பாஜக நிர்வாகிகள் ஒவ்வொரு முறையும் சட்டம், ஒழுங்கு காப்பாற்ற முடியவில்லை. திமுக அரசுக்கு நாட்கள் குறிக்கப்பட்டு விட்டது.
