ARTICLE AD BOX
சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே சைலண்டாக முடிந்துவிடும்.
இதையும் படியுங்க: நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!
அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான் சீரியல் நடிகை பகிர்ந்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் பிரபலமானவராக திகழ்ந்து வருபவர் நடிகை செந்தில் குமாரி.

பசங்க படம் மூலம் தனது கேரியரை ஆரம்பித்த செந்தில் குமாரி, பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், சார்லி சாப்ளின் 2 படத்தில் நடந்தி விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் பிரபுதேவாவின் காது கேளாத அம்மா கேரக்டரில் நான் நடித்தருந்தேன்.

ஒரு காட்சியில் பிரபுதேவா என்னிடம் சொல்லாமலேயே கட்டிப்பிடித்து காதை கடித்தார். இதனால் நான் கத்தினேன். உடனே ஏன் சார் சொல்லாமல் அதை செஞ்சீங்க என பிரபுதேவாவிடம் வாக்குவாதம் செய்தேன். உடனே அவர், சொல்லாம செய்ததால்தான் நீ கத்துன என கூறியதாக செந்தில்குமாரி பகிர்ந்துள்ளார்.
