ARTICLE AD BOX
ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமன் இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்துகிறார். அவர் தினந்தோறும் இரவில் தனது இரால் பண்ணைக்கு காவலுக்கு சென்று அதிகாலையில் வீடு திரும்புவார்.
இந்த நிலையில் லட்சுமன் மனைவி நாகலட்சுமி தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கல்லூரியில் படிக்கும் மணிகண்டா என்ற மாணவனுடன் நாகலட்சுமிக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவைக் கொண்டிருந்தார்.
இதையும் படியுங்க: மனைவி சொல்லியும் கேட்காத கணவன்.. வீட்டுக்குள் கிடந்த 4 சடலம் : திருச்சியில் சோகம்!
மணிகண்டாவும் நாகலட்சுமியும் பலமுறை ரகசியமாக வெளியில் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமன் இறால் பண்ணைக்கு சென்றபோது மணிகண்டாவை வீட்டிற்கு வரவழைத்த நாகலட்சுமி தனது 7 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டே இருவரும் வீட்டில் ஒன்றாகத் தங்கினர்.
இரவில் வழக்கம் போல் இறால் பண்ணைக்கு சென்ற லட்சுமணன், மனைவி மீது சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீடு திரும்பினான். ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, அவர்கள் இருவரும் தனியாக இருந்ததை பார்த்த லட்சுமணன் வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு போலீசாருக்கும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக, சுற்றியுள்ள மக்களும் அங்கு வந்தபோது நாகலட்சுமி காதலன் மணிகண்டாவையும் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது மணிகண்டாவை தாக்க முயன்ற லக்ஷ்மனை போலீசார் தடுத்து மணிகண்டாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்