பல கோடிகளை பெற்று மோசடி செய்த ‘கேடி தம்பதி’… BMW, BENZ கார்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை!

2 weeks ago 30
ARTICLE AD BOX

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மருந்து கடை நடத்தும் தம்பதி சிவக்குமார், தாரண்யா மற்றும் சிவகுமாரின் உறவினரான ஹரிஷ் ஆகியோர் இவருக்கு பழக்கமாகினர். சிவகுமார் – தாரண்யா தம்பதி சிவகாமி ப்ளோரில் டெக் என்ற பெயரில் அலங்கார மலர்கள் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறி உள்ளனர்.

இதையும் படியுங்க: ஜாமீன் வேணுமா? அமைச்சர் பதவி வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!

நிர்வாகத்தை ஹரிஷ் கவனித்து வருவதாகவும் தங்கள் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாகவும், ஆசை வார்த்தைகளை கூறினர். அதை நம்பிய கடந்த ஆண்டு அக்டோபரில் 1.1 கோடி ரூபாய், நவம்பரில் 45 லட்சம் ரூபாய் என 1.46 கோடி ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு சிவராமன் அனுப்பி வைத்தார்.

பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் லாப பணத்தை கொடுக்காததால் சிவக்குமாரிடம், சிவராமன் கேட்டார் அதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை, தம்பதி ஏற்கனவே பலரிடம் மோசடி செய்ததை அறிந்த சிவராமன் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார், தம்பதியர் கைது செய்து, தலைமறைவான ஹரிசை தேடி வருகின்றனர். மூவரும் சேர்ந்து பலரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமாக இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Fraud Couple Arrested after defrauded 8 Crore Rupees

ஒரு லோடு ஆட்டோ, பிஎம்டபிள்யூ, தியா கார்னிவல், டொயோட்டா ஃபார்ச்சூனர் , பென்ஸ் நிறுவன கார்கள் உள்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.

  • siruthai siva shift his office from anna nagar வீட்டை காலி செய்யும் சிறுத்தை சிவா? கங்குவா படத்தால இப்படி ஒரு நிலைமையா வரணும்?
  • Continue Reading

    Read Entire Article