ARTICLE AD BOX
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர்.
பின்னர் மிருத்யுஞ்சய சுவாமி மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்தனர். கோமாதாவுக்கு பூஜை செய்து வாழைப்பழம் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கயாது லோஹர் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து முதன்முறையாக ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த கோயிலுக்கு வருகை தந்தது மிகவும் தெய்வீக அனுபவமாக இருந்ததாகவும், ஸ்ரீ காளஹஸ்தி சுவாமி சன்னதிக்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.