ARTICLE AD BOX
இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பும் தேசத்துரோகிகளை கைது செய்து வரும் நிலையில் பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: காருக்குள் விளையாடிய போது கதவு பூட்டிக்கொண்டதால் விபரீதம் : மூச்சு திணறி 4 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீசார் கைது செய்துள்ளனர். ராம்பூர் பகுதியை சேர்ந்த ஷாஜாத், பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்து நிலயில், சட்டவிரோதமாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி, மசாலா பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
மேலும் ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை போலீசார், ஷாஜாத்தை கண்காணித்து வந்த நிலையல் அநற்று மொரதாபாத்தில் கைது செய்தனர், ஐஎஸ்ஐ முகவர்களுக்கு பணம் மற்றும் சிம் கார்டுகளை வழங்கியதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஐஎஸ்ஐக்காக உளவு பார்க்க ஆட்களை சேர்த்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
