மனைவியை நிர்வாணமாக்கி… வீடியோ எடுத்த கணவன் : நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூரம்!

1 month ago 22
ARTICLE AD BOX

நாளுக்கு நாள் நாட்டில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

தற்போது மகாராஷ்டிரா தானே பகுதியில் உள்ள உல்ஹாஸ்நகரில் மனைவிக்கு தெரியாமல் கணவன் அந்தரங்க வீடியோ எடுத்த சம்பவம் அதிர்வ்லையை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு போதை மருந்து கொடுத்து மயங்க வைத்துள்ளார் கணவன். மயக்கத்தில் இருந்த மனைவியின் உடலில் ஆடைகளை அகற்றி அதை வீடியோவாக எடுத்துள்ளான் கணவன்.

மேலும் அதை தனது நண்பருக்கு அனுப்பி பார்க்க சொல்லியுள்ளான். நண்பனும் கொஞ்சும் கூட கூச்சமில்லாமல் போட்டோவை பார்த்து ஆசுவாசப்படுத்தியுள்ளான்.

பின்னர் அந்த பெண்ணுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளான். உனது அந்தரங்க போட்டோக்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டியுள்ளான்.

இதையறிந்து கணவனிடம் கேள்வி கேட்ட மனைவி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தினமும் போதை மருந்தை சாப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தி, மனைவியை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துள்ளான் இந்த கொடூர கணவன்.

இந்த கொடுமையை தாங்க முடியாத பெண், காவல்துறையின் உடனே புகாரளித்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நண்பனுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

  • Ajith kumar cat viral videoஎன் கூட சென்னைக்கு வர்ரியா? பூனையை மடியில் வைத்து கியூட்டாக கொஞ்சிய அஜித்- வைரல் வீடியோ
  • Continue Reading

    Read Entire Article